நாடளாவிய ரீதியில் முழு நேர நீர் விநியோகத்தில் சிக்கல்!

Date:

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக குடிநீரை வழங்குவது சவாலாக மாறியுள்ளது.

நாடளாவிய ரீதியில் இயங்கி வரும் 344 நீர் விநியோக நடவடிக்கைகளில் 20 முழு நேர நீர் விநியோக நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டு நேர அட்டவனை (Shift) அடிப்படையில் நீர் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

அதன்படி,குருநாகல், ஹெட்டிபொல, நிக்கவெரடிய, வாரியபொல, மாத்தறை – ஊருபொக்க ஹம்பாந்தோட்டை – பெலிஅத்த, முருத்தவெல, தங்கல்ல, வலஸ்முல்ல, அக்கறைப்பற்று, பொத்துவில், திருக்கோயில், மொனராகலை, பிபிலை, அம்புகஸ்துவ, பண்டாரவளை, ஹல்தும்முல்ல, போகஹாகும்புர, கந்தேகெடிய, சீலதெடிய, அமுனுகெலே, கெப்பெட்டிபொல ஆகிய பகுதிகளில் நீர் வழங்கல் அமைப்புகளில் கண்காணிப்பு முறையின் கீழ் கட்டுப்பாடுகளுடன் நீர் விநியோகம் செய்யப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குடிநீர் பிரச்சினையால் இதுவரை நாட்டில் 11 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும், நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ், கட்டுப்பாட்டில் உள்ள 73 மஹாவரி வர்த்தக நிறுவனங்களில் 42 நிறுவனங்களின் செயற்றிறன் நீர் கொள்ளளவு 30% வரை குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு தண்ணீரை சிக்கனமாக பாவிக்குமாறு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மக்களுக்கு அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

5ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்கு அறிவித்தல்

2025 ஆம் ஆண்டின் தரம் 5 புலமைப் பரிசில் பெறுபேறுகளுக்கமைய பாடசாலைகளில்...

நாடு திரும்பும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி...

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் மரணம்.

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் இயற்கை எய்தியுள்ளார். 81 வயதான அவர்...

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

இன்றையதினம் (12) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மாகாணங்களில்...