அந்நியச் செலாவணியை உருவாக்கக்கூடிய தொழிலாக சுதேச மருத்துவத் துறையை மேம்படுத்த நடவடிக்கை!

Date:

சுதேச மருத்துவத் துறையை அந்நியச் செலாவணியை உருவாக்கக்கூடிய வர்த்தகப் பெறுமதியைக் கொண்ட ஒரு தொழிலாக மேம்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

ஸ்திரமான நாட்டிற்கு கூட்டுப் பாதை என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஆரோக்கியமான சனத்தொகையைக் கட்டியெழுப்புவதற்காகவும், சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவும் சுதேச மருத்துவ முறையிலும் ஆயுர்வேத முறையிலும் பல புதிய போக்குகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த காலகட்டத்தை சுதேச மருத்துவத்துறையில் புத்துயிர் பெற்ற சகாப்தமாக குறிப்பிடலாம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலின் பேரில், கடந்த காலங்களில் நாங்கள் விரிவான பணிகளைச் செய்துள்ளோம்.

நம் நாட்டில் சுதேச மருத்துவ சேவை என்பது தரமான மருத்துவ சேவையாக காலம் காலமாக இருந்து வருகிறது. அதற்கு அப்பால் சுதேச மருத்துவத்துறையை வர்த்தக பெறுமதியுடன் கூடிய அந்நிய செலாவணியை உருவாக்கக்கூடிய ஒரு தொழிலாக அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தை சுதேச மருத்துவ அமைச்சு மற்றும் ஆயுர்வேத திணைக்களம் இணைந்து தற்போது ஆரம்பித்துள்ளன.

Popular

More like this
Related

விசேட தேவையுடையோருக்கென பிரத்தியேக பஸ் சேவை

வேலைத்திட்டத்தின் கீழ் விசேட தேவையுடைவர்களுக்கான முன்னுரிமை அடிப்படையிலான பஸ் சேவைக்கான பஸ்கள்...

இலங்கையின் சனத்தொகை மாற்றம்: காலநிலை மாற்றம் மற்றும் கொள்கை குறைபாடுகளால் ஏற்படும் சமூக-பொருளாதார நெருக்கடிகள்

இலங்கை ஒரு விரைவான சனத்தொகை மாற்றத்தை எதிர்கொண்டு வருகின்றது. தற்போது நாட்டின்...

இலங்கையின் புதிய இராஜதந்திரிகள் தூதுவர்களின் நியமனங்களுக்கு நாடாளுமன்றம் அனுமதி

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் பிரதானிகளாக நியமிக்கப்படுவதற்காக, அண்மையில் ஜனாதிபதி அநுர...

பிலிப்பைன்சின் நெல் ஆராய்ச்சி நிலையத்திற்கு பிரதமர் விஜயம்

பிலிப்பைன்சின் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய...