மையவாடியிலிருந்து தோண்டி எடுக்கப்படும் ஜனாஸாக்கள்?

Date:

தென் மாகாணம் – மாத்தறை மாவட்டத்தில் முஸ்லிம் கிராமம் ஒன்றில் மையவாடியில் அடக்கம் செய்யப்படும் ஜனாஸாக்கள் சில­வற்றின் மண்­டை­யோடு, எலும்­புகள் முத­லான உடற்­பா­ங்கள் மர்­ம­மான முறையில் தோண்டி எடுக்­கப்­பட்டு அகற்­றப்­பட்டு வருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரிவித்துளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் துரித நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கோரி தென்­மா­காண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெத­வத்­த­விற்கு கடிதம் மூலம் அறிவிப்பு ஒன்றை வழங்கியுள்ளார்.

“மாத்­த­றை­ மா­வட்­டத்தில் மாலிம்­மட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியான தெலிஜ்­ஜ­வில, ஹொர­கொ­டவில் ஏறத்­தாழ 150 முஸ்லிம் குடும்­பங்கள் வசித்து வரு­கின்­றன.

மீரான் ஜும்ஆ பள்­ளி­வாசல் அங்­குதான் அமைந்துள்ளது. அந்த பகுதியில் இருந்து சற்று தொலை­வி­லேயே பிரஸ்­தாப முஸ்லிம் மைய­வாடி அமைந்­துள்­ளது. அந்த பகுதியில் சில முஸ்லிம் குடும்பங்கள் வாழ்கின்றனர். ஆள் நட­மாட்­டமும் அங்கு குறை­குறைவாகவே காணப்­ப­டுகின்றது.

இது சம்­பந்­த­மாக பொது­மக்கள் பாது­காப்பு அமைச்சர் 2023.06.08 ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தில் பதி­ல­ளிக்கும் பொழுது இவ்வாறான சம்­ப­வங்கள் நடை­பெ­று­வதை ஏற்றுக் ஏற்றுக்கொண்டுள்ளதோடு அதனை தடுப்­ப­தற்­கான வழிமுறைகளையும் தெரி­வித்­துள்ளார்.

அதன்பின்­னரும், சில சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுள்­ளன. 2023.07.03ஆம் திகதி அல்­லது அது அண்­மித்த நாளில் இந்த முஸ்லிம் மைய­வா­டி­யி­லி­ருந்து 16 மாதங்­க­ளுக்கு முன்னர் அடக்கம் செய்­யப்­பட்ட ஒரு வயோ­திப பெண்ணின் மண்­டை­யோடு அகற்­றப்­பட்டு இருக்­கி­றது.

அவ்­வாறே, மூன்று மாதங்­க­ளுக்கு முன்னர் அடக்கம் செய்­யப்­பட்ட 72 வய­தான ஜெலீல் என்­ப­வ­ரது ஜனா­ஸாவை அகற்றும் முற்சியும் மேற்­கொள்ளப்­பட்­டி­ருந்­தது.

அது பற்றி மாலிம்­மட பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாட்டில் பதிவு செய்யப்­பட்­டி­ருக்­கி­றது.

இதன் பின்­ன­ணியில் மேற்­கொள்­ளப்­பட்ட நட­வ­டிக்­கைகள் பற்றி எனக்கு அறி­யப்­ப­டுத்­துங்கள்“ என குறிப்பிட்டுள்ளது.

ஏன் இவ்­வாறு ஜனா­ஸாக்­களின் உடற்பாகங்கள் களவாக அகற்றப்படுகின்றன? என்று கேட்டபோது, பொதுவாக பில்லி, சூனியம் போன்ற செய்வினைகளுக்கு இவ்வாறான உடற்பாகங்கள் பயன்படுத்தப்படுவதாக நம்பப்படுவதாகவும், சில வேளைகளில் அவை மருத்துவம் கற்கும் மாணவர்களுக்கு விற்கப்படுவதாக எண்ணுவதாகவும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

உலக மனிதநேய தினம்: மனிதாபிமானத்தை முதன்மையாகக் கருதும் சவூதி அரேபியா – இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர்

எழுத்து: கெளரவ காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் ஆகஸ்ட்...

சமூக சேவை அதிகாரிகளுக்கான பயிற்சித் திட்டங்களுக்காக 2026 வரவு செலவுத் திட்டத்தில் விசேட கவனம்

2025 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் அடிப்படையில்...

நாட்டின் சில பகுதிகளில் சிறிதளவு மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (20) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி மற்றும் மனைவிக்கு விளக்கமறியல்!

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி...