சிறைச்சாலையில் பக்டீரியா பரவலால் கைதிகளை நீதிமன்றுக்கு அழைத்துச் செல்வதில் கட்டுப்பாடு

Date:

காலி சிறைச்சாலையில் பரவிவரும் மெனிங்கோகோகஸ் (Menigococcus) பக்டீரியா காரணமாக வழக்கு விசாரணைகளுக்காக கைதிகளை நீதிமன்றுக்கு அழைத்துச் செல்வதை எதிர்வரும் 2 வாரங்களுக்கு மட்டுப்படுத்துமாறு சுகாதார அமைச்சு, சிறைச்சாலை திணைக்களத்துக்கு அறிவித்துள்ளது.

அதற்கமைய, குறித்த காலப்பகுதியில் புதிய கைதிகளை சிறைச்சாலைக்குள் அனுமதிப்பதை இடைநிறுத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், சிறைக் கைதிகளை பார்வையிடச் செல்லும் போது சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுமாறு உறவினர்களுக்கு சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

இந்தநிலையில், தற்போது குறித்த பக்டீரியா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்

அதேநேரம், காலி சிறைச்சாலையில் உள்ள கைதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...