சிறைச்சாலையில் பக்டீரியா பரவலால் கைதிகளை நீதிமன்றுக்கு அழைத்துச் செல்வதில் கட்டுப்பாடு

Date:

காலி சிறைச்சாலையில் பரவிவரும் மெனிங்கோகோகஸ் (Menigococcus) பக்டீரியா காரணமாக வழக்கு விசாரணைகளுக்காக கைதிகளை நீதிமன்றுக்கு அழைத்துச் செல்வதை எதிர்வரும் 2 வாரங்களுக்கு மட்டுப்படுத்துமாறு சுகாதார அமைச்சு, சிறைச்சாலை திணைக்களத்துக்கு அறிவித்துள்ளது.

அதற்கமைய, குறித்த காலப்பகுதியில் புதிய கைதிகளை சிறைச்சாலைக்குள் அனுமதிப்பதை இடைநிறுத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், சிறைக் கைதிகளை பார்வையிடச் செல்லும் போது சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுமாறு உறவினர்களுக்கு சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

இந்தநிலையில், தற்போது குறித்த பக்டீரியா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்

அதேநேரம், காலி சிறைச்சாலையில் உள்ள கைதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

டிரம்பின் அமைதி திட்டத்தின்படி போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றது ஹமாஸ்!

ஏறத்தாழ கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தற்போது...

போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

நாட்டின் பல பகுதிகளிலும் ஹெரோயின், ஐஸ், கொக்கேயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட...

இலங்கையில் அவசர எரிசக்தி துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தும் உலக வங்கி!

பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளை விட இலங்கை தொடர்ந்து கணிசமாக அதிக...

சிறுவர்களை ஆபாச செயற்பாடுகளுக்குள் தள்ளும் டிக்டொக் : ஆய்வில் தகவல் !

டிக்டொக் (TikTok) செயலியானது அதன் பரிந்துரைக்கப்பட்ட தேடல் சொற்கள் மூலம் இளம்...