புகையிரத தொழிற்சங்க நடவடிக்கையால் பயணிகள் பாதிப்பு

Date:

புகையிரத கட்டுப்பாட்டாளர்களினால் நேற்று (22) இரவிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட திடீர் தொழிற்சங்க நடவடிக்கையினால், பயணிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

புகையிரத பிரதி கட்டுப்பாட்டாளர் ஒருவருக்கு தாக்கிய சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தே புகையிரத கட்டுப்பாட்டாளர்களினால் இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மாளிகாவத்தை புகையிரத பிரிவில் நேற்று இரவு 7 மணியளவில் புகையிரத பிரதி கட்டுப்பாட்டாளர் ஒருவர் மீது அதே பிரிவில் சேவை செய்யும் இன்னுமொரு ஊழியர் ஒருவரே இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளதாக கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதற்கமையை, இந்த தாக்குதல் சம்பவத்துக்கு உடனடி நடவடிக்கை எடுக்கும் வகையில் சேவைகளிலிருந்து நீங்குவதற்க்கு அந்த சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் காரணமாக இரவு நேர தபால் புகையயிரதம் தாமதமாக புறப்பட்டதால் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருந்தனர்.

எவ்வாறாயினும் இரவு 9 மணியளவில் தொழிற்சங்க நடவடிக்கை முடிவுக்கு வந்தது.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...