விஐபிக்களின் பாதுகாப்புக்காக மட்டும் 7000க்கும் அதிகமான பொலிஸார் கடமையில் !

Date:

வி.ஐ.பிக்களின் பாதுகாப்புக்காக 7,693 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கொழும்பு மாவட்ட சபை உறுப்பினர் ஜகத் குமார கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர்களில் 563 பேர் அமைச்சர்களுக்கும் 1811 பேர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்புக்காக பணிபுரிகின்றனர்.

மேலும், பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்காத உயரதிகாரிகளுக்காக இரண்டாயிரத்து நூற்று எழுபத்தாறு அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஓய்வுபெற்ற ஜனாதிபதிகள், முன்னாள் பிரதி அமைச்சர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், ஆளுநர்கள், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர், முன்னாள் மத்திய வங்கி ஆளுநர், ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் எனப் பல பிரிவுகள் பாராளுமன்ற உறுப்பினர் அல்லாத உயரடுக்கு பிரிவைச் சேர்ந்தவர்கள் எனவும் அமைச்சர் இங்கு குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...