இலங்கையிலிருந்து அனுப்பப்பட்ட விண்கலத்துக்கு என்ன நடந்தது? 320 மில்லியன் எங்கே?

Date:

இலங்கையினால் விண்ணுக்கு அனுப்பப்பட்ட சுப்ரீம் சட் விண்கலத்திற்காக செலவு செய்யப்பட்டதாக கூறப்படும் 320 மில்லியன் டொலர் நிதிக்கும் என்ன நடந்தது?அது தொடர்பில் பாராளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்தியா விண்வெளி பயணத்தில் சந்திராயன் 1, சந்திராயன் 2 மற்றும் சந்திராயன் 3 என்று மூன்று முயற்சிகளை மேற்கொண்டே சந்திரனில் காலடி வைத்துள்ளது. இந்த மூன்று திட்டங்களுக்கும் மொத்தமாக 263 மில்லியன் டொலர்களே செலவாகியுள்ளது.

ஆனால் எமது நாட்டில் 2012 ஆம் ஆண்டில் ‘சுப்ரீம்சட் 1’ திட்டத்திற்காக 320 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு செலவு செய்யப்பட்ட 320 மில்லியன் டொலருக்கும் என்ன நடந்தது என்பது தொடர்பில் பாராளுமன்றத்திற்கு அறிக்கையொன்றை முன்வைக்குமாறு நான் சபை முதல்வரிடம் கோரிக்கை விடுக்கின்றேன். இவ்வளவு செலவு செய்து சந்திரனுக்கு போகவில்லை. நாட்டை பாதாளத்திற்கே கொண்டு சென்றுள்ளனர் என்றார்.

Popular

More like this
Related

சிறுவர்களை ஆபாச செயற்பாடுகளுக்குள் தள்ளும் டிக்டொக் : ஆய்வில் தகவல் !

டிக்டொக் (TikTok) செயலியானது அதன் பரிந்துரைக்கப்பட்ட தேடல் சொற்கள் மூலம் இளம்...

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் hacking தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு!

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் ஊடுருவல் (hacking) தொடர்பான முறைப்பாடுகள்...

இலங்கையில் புற்றுநோய்க்கு எதிரான மருந்தைக் கண்டுபிடிப்பதில் வெற்றி!

மனித உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்  புற்றுநோய்க்கு உலகளவில் வைத்தியதுறை மருந்து கண்டுபிடிப்பதில்...

கொழும்பு – கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான சேவை ஆரம்பம்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல்...