திருகோணமலை விபத்தில் சிறுமி உயிரிழப்பு: இருவர் கவலைக்கிடம்!

Date:

திருகோணமலை துறைமுக வீதி கனத்த சந்தியில் இன்று (26) அதிகாலை வேன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அதே மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணொருவரும் மற்றுமொரு சிறுமியும் காயமடைந்துள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்தனர்.

வேனை ஓட்டிச் சென்ற வேன் சாரதி ஆபத்தான நிலையில் இருந்த தனது தாயை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் ஆபத்தான நிலையில் இருந்த தாய் கொண்டு செல்லும் போதே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வேன்-மோட்டார் சைக்கிள் விபத்தில் திருகோணமலை, Dockyard வீதியை வசிப்பிடமாகக் கொண்ட புனித மரியாள் பெண்கள் கல்லூரியில் 05ஆம் ஆண்டில் கல்வி கற்று வந்த Edwick Sheralyn Tacey (வயது 09) என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.

அதே முகவரியைச் சேர்ந்த லிண்டா லீனா (வயது 34) என்ற பெண்ணும், ஜூட் கவிசாலினி (வயது 08) என்ற சிறுமியும் காயமடைந்ததுடன், காயமடைந்த சிறுமியின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

காயமடைந்த பெண் தனது இளைய சகோதரி மற்றும் இளைய சகோதரனின் இரண்டு மகள்களை மேலதிக வகுப்புகளை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு அழைத்துச் சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் திருகோணமலை துறைமுக பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.ஜே.எஸ்.ரணவீர தலைமையில் நடைபெறவுள்ளது.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...