அரசாங்க வாகனங்கள் தொடர்பில் கணக்கெடுப்பு!

Date:

அரசாங்க அமைச்சுக்களின் திணைக்களங்கள், நிறுவன சபைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களில் உள்ள வாகனங்கள் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் கணக்கெடுப்பு ஒன்றை மேற்கொள்ள நிதியமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்த நிறுவனங்களில் உள்ள வாகனங்கள் குறித்த தகவல்களை எளிய தொழில்நுட்ப செயல்முறை மூலம் திறைசேரி பெற்றுக்கொள்ளும் வகையில், இதற்காக புதிய கணினி மென்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த மென்பொருளில் சகல வாகனங்கள் தொடர்பான தகவல்களையும் உள்ளிடுமாறு அமைச்சு முன்னதாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சு முன்னதாக கடந்த 2015 ஆம் ஆண்டு இத்தகைய கணக்கெடுப்பை நடத்தியது. பயன்படுத்தக்கூடிய மற்றும் பயன்படுத்த முடியாத வாகனங்களின் எண்ணிக்கையை துல்லியமாக மதிப்பிடுவதே இந்த கணக்கெடுப்பின் நோக்கமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில், அரசு நிறுவனங்களில் சுமார் 80 ஆயிரம் வாகனங்கள் உள்ளதாக கண்டறியப்பட்டது.

இந்த முறை மத்திய அரசாங்கத்திற்கு சொந்தமான வாகனங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு சொந்தமான வாகனங்கள் பற்றிய தகவல்கள் முறைப்படி ஆய்வு செய்யப்பட்டு சேகரிக்கப்படும் என நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவரத்தன குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...