பாகிஸ்தான் இஸ்லாமிய அழைப்பாளர் டொக்டர் அம்ஜத் அஹ்ஸன் அலி மறைவு: உலமா சபைத் தலைவர் ரிஸ்வி முப்தி அனுதாபம்!

Date:

பாகிஸ்தானின் பிரபல இஸ்லாமிய அழைப்பாளர் டொக்டர் அம்ஜத் அஹ்ஸன் அலியின் மரணத்தையிட்டு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்.ரிஸ்வி முப்தி அனுதாபம் வெளியிட்டுள்ளார்.

ஒரு பெரும் ஆலிமுடைய வபாத் தொடர்பான கவலையான செய்தி இன்று எம்மை வந்தடைந்திருக்கிறது. வைத்தியத் துறையில் பட்டம் பெற்ற டொக்டர் அம்ஜத் அஹ்ஸன் அலி, பிற்காலத்தில் தனது தாயினுடைய வஸீயத்துக்காக பல உலமாக்களிடம் ஷரீஆக் கல்வியைக் கற்றுத் தேர்ந்தார்.

அரபு மொழியைக் கற்பிப்பதற்காக ஆயிஸா ஸித்தீககா என்றும் இப்னு அப்பாஸ் என்றும் இரண்டு நிறுவனங்களை அவர் உருவாக்கினார்.

அல்குர்ஆனை மனனமிடுவது போல ஸஹீஹ் புஹாரி போன்ற கிரந்தங்களையும் மனனமிடுகின்ற இந்தக் கல்வி நிறுவனங்களில் இலங்கையிலிருந்தும் பல சகோதரிகள் கற்றிருக்கின்றார்கள்.

டொக்டர் அம்ஜத் அவர்கள் இலங்கைக்கும் விஜயம் செய்த போதும் நாம் பாகிஸ்தானில் நாங்கள் அவருடைய கல்வி நிறுவனங்களுக்குச் சென்றபோதும் அவரிடமிருந்து நிறைய அனுபவங்கள் எங்களுக்குக் கிடைத்தன.

அல்லாஹுத்தஆலா அவரது பணிகளைப் பொருந்திக் கொள்வானாக என அஷ். ரிஸ்வி முப்தி தனது அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் சௌத்ரி முஹம்மத் அலியின் மகனான இவர் பாகிஸ்தானின் ஹிஜாமா சிகிச்சை முறையின் முன்னோடியாவார்.

பாகிஸ்தான் லியாகத் தேசிய வைத்தியசாலையின் மருத்துவத் துறைப் பீடாதிபதியாகவும் கடமையாற்றியுள்ள இவர் கைதேர்ந்த இருதய சத்திர சிகிச்சை நிபுணருமாவார்.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...