இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், வியானா உடன்படிக்கையின் இராஜதந்திர எல்லைகளை மீறியுள்ளதாக குற்றஞ்சாட்டி தேசிய அமைப்புகளின் கூட்டமைப்பினர் வெளிவிவகார அமைச்சிடம் கடிதமொன்றை நேற்று கையளித்தனர்.
66 அமைப்புகளின் பிரதிநிதிகள் கையெழுத்திட்டதாக கூறப்படும் இந்த கடிதத்தின் பிரதியை தேசிய அமைப்புகளின் கூட்டமைப்பினர் வெளிவிவகார அமைச்சுக்கு சென்று கையளித்தனர்.
வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதியொருவர் கடிதத்தை பெற்றுக்கொண்டார்.