நிலவின் மேற்பரப்பில் கந்தகம்: சந்திரயான்-3 கண்டுபிடிப்பு!

Date:

சந்திரனை ஆய்வு செய்வதற்காக விண்ணில் ஏவப்பட்ட ‘சந்திரயான்-3’ விண்கலமானது கடந்த 23 ஆம் திகதி சந்திரனின் தென் துருவப் பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கி தற்போது ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வருகின்றது.

இந்நிலையில் நிலவின் மேற்பரப்பில் கந்தகம் இருப்பதை பிரக்யான் ரோவரில் உள்ள ஏ.பி.எக்ஸ்.எஸ். கருவி கண்டறிந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

அது மட்டுமல்லாது கந்தகம் தவிர வேறு சில சிறு கனிமங்களையும் அந்த கருவி கண்டுபிடித்திருப்பதாகவும், கந்தகம் இருப்பதற்கு காரணம் எரிமலையா? எரிகல்லா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என விஞ்ஞானிகள் ஆய்வு செய்துவருகின்றனர் எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இதேவேளை நிலவின் மேற்பரப்பில் பாதுகாப்பான பாதையைத் தேடி பிரக்யான் ரோவர் சுற்றி வலம் வந்த காட்சியை விக்ரம் லேண்டரின் கேமரா படம் பிடித்துள்ள நிலையில் குறித்த காட்சியை பகிர்ந்துள்ள இஸ்ரோ, சந்திரனில் குழந்தை விளையாடுவதை தாய் பாசத்துடன் வேடிக்கை பார்ப்பது போல அக்காட்சி அமைந்திருப்பதாக வர்ணித்துள்ளது.

 

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...