நமது அரசியல் தலைமைகளுக்கு பாடம் புகட்டும் கேரள மாநில முதலமைச்சர்!

Date:

ஒரு முஸ்லிம் மாணவியின் மருத்துவக்கல்வி கனவு நனவாகிட ஒரு மணி நேரத்தில் சட்டத்தில் திருத்தம் செய்து உதவி செய்துள்ள இந்தியாவின் கேரள மாநிலத்தின் முதல்வர் பிணராய் விஜயன்.

கேரள சபாநாயகர் ஸ்ரீ ராமகிருஷ்ணன் தொகுதியைச் சேர்ந்த ஏழை மீன்பிடி தொழிலாளி மகள் சுல்பத் பாத்திமா.

+2 வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற சுல்பத்க்கு தனியார் மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்தும் ரூபாய் 11 லட்சம் கட்டணத்தை செலுத்த முடியாமல் மாணவியும் பெற்றோரும் வருந்தும் தகவல்கள் சபாநாயகர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில் மீன்வளத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்ட சபாநாயகர் சுல்பத் கல்வி கட்டணத்தை செலுத்த அறிவுறுத்தல் செய்த போது, கேரள மீன்பிடி தொழிலாளிகள் பட்டியலில் முஸ்லிம் சமூகத்தின் பெயர் இல்லாத விபரங்கள் தெரிய வந்தது.

உடனடியாக சபாநாயகர் மாணவியின் மருத்துவ கல்லூரி அனுமதிக்கான விடயத்தை  கேரள முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்ல ஒரு மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் அவசர கூட்டம் நடத்தி மீன்பிடி தொழிலாளிகள் பட்டியலில் முஸ்லிம் சமூகத்தின் பெயரை உட்படுத்திய சட்ட திருத்தம் வெளியானது.

தற்போது மாணவி சுல்பத்தின் மருத்துவ கல்லூரி ஐந்து வருடத்திற்கான கட்டணத்தையும் கேரள மீன்வளத்துறை ஏற்றுக் கொள்வதாக உறுதியளித்த கடிதம் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரிக்கு வழங்கப்பட்டது.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...