ஆயிரம் ரூபாய் வரை உயிர்த்த வேண்டிய இடத்திலேயே 145 ரூபாயை உயர்த்தியுள்ளோம்: முதித பீரிஸ்

Date:

ஆயிரம் ரூபாய்வரை உயிர்த்த வேண்டிய இடத்திலேயே 145 ரூபாயை உயர்த்தியுள்ளோம் என்று லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

எரிவாயுவின் விலை இம்மாதம் அதிகரிக்கும் என்பதை நாம் கடந்த மாதமே அவதானித்திருந்தோம். இதனால், 10 ஆயிரம் டொன்னுக்கும் அதிகமான எரிவாயுவை, இம்மாதத்திற்கும் சேர்த்தே நாம் கொள்வனவு செய்திருந்தோம்.

தற்போது சுமார் 100 டொலர் அளவில் எரிவாயு விலை அதிகரித்துள்ளது.
இந்த அதிகரிப்புடன், கடந்த மாத அதிகரிப்பையும் சேர்த்துப் பார்க்கையில், 900 முதல் 1000 ரூபாய்வரை அதிகரிப்பு காணப்படுகிறது.

எவ்வாறாயினும், நாம் 12.5 கிலோ லிட்ரோ எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையை 145 ரூபாய் மட்டும் உயர்த்தியுள்ளோம்.

கடந்த 7 மாதங்களுக்கும் முன்னர், உலக சந்தையில் தற்போது இருக்கும் இதே விலை தான் அன்றும் காணப்பட்டது. ஆனால், டொலர் உள்ளிட்ட பல பிரச்சினைகள் காரணமாக நாட்டில் சிலிண்டர் ஒன்று, அப்போது 4186 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இன்று எமது நிறுவனம் பலமடைந்த காரணத்தினால்தான், மக்களுக்கு சுமையேற்படுத்தாத வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

தொடர்ச்சியாக எரிவாயு சிலிண்டரின் விலையை குறைத்து வந்த நாம், நீண்ட காலத்திற்கு பின்னரே விலையை உயர்த்தியுள்ளோம்.

கடந்த 5 மாதங்களில் மட்டும் சுமார் 2 ஆயிரம் ரூபாய்வரை குறைத்தே தற்போது 145 ரூபாயை உயர்த்தியுள்ளோம்.சில இடங்களில் எரிவாயு தட்டுப்பாடு காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனை நிவர்த்தி செய்யவும் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.- என்றார்.

 

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...