ஞானசார தேரர் உள்ளிட்ட எழுவருக்கு எதிரான வழக்கை மீள அழைக்க உத்தரவு

Date:

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 11ஆம் திகதி மீள அழைக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே இன்று உத்தரவிட்டார்.

புனித குர்ஆன் தொடர்பான தவறான மற்றும் போலியான அறிக்கைகளை ஊடகங்களுக்கு வெளியிட்டமை தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்கள் கிடைக்கவில்லையென பொலிஸாரால் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில், பிணையில் உள்ள பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார உள்ளிட்ட பிரதிவாதிகள் குழு இன்று நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தது

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...