உயர்தரப் பரீட்சையில் 9,904 மாணவர்கள் மூன்று A சித்திகளைப் பெற்றுள்ளனர்

Date:

2022 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மொத்தம் 9,904 மாணவர்கள் மூன்று பாடங்களுக்கும் ‘ஏ’ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

2022 உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

பரீட்சைகள் திணைக்களத்தின் படி, 2022 உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய 166,938 மாணவர்கள் அரச பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பதற்கான தேவையைப் பூர்த்தி செய்துள்ளனர்.

இதற்கிடையில், உயிரியல் பிரிவில் 817 மாணவர்கள், பௌதீக அறிவியல் பிரிவில் 1,088 மாணவர்கள், 4,198 வணிகப் பிரிவு மாணவர்கள், 3,622 கலைப் பிரிவு மாணவர்கள், 90 பொறியியல் தொழில்நுட்பப் பிரிவு மாணவர்கள் மற்றும் 73 பயோ சிஸ்டம்ஸ் டெக்னாலஜி மாணவர்கள் 3 பாடங்களுக்கும் ‘A’ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

மேலும், பல்வேறு பாடங்களில் தேர்ச்சி பெற்ற 36 மாணவர்களும் தேர்வில் தலா மூன்று ‘A’ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

2022 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மொத்தம் 331,709 மாணவர்கள் தோற்றியுள்ளனர்.

Popular

More like this
Related

மத்திய கிழக்கு நாடுகளுடன் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை: இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், மத்திய கிழக்கு முழுவதும் உள்ள...

ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து 84 சடலங்கள் மீட்பு

இலங்கையை அண்மித்த கடற்பிராந்தியத்தில் விபத்துக்குள்ளான ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை

ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல்...

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...