இலங்கை புகைப்படக் கலைஞருக்கு சவூதி அரேபிய இளவரசரிடமிருந்து அங்கீகாரம்!

Date:

இலங்கையைச் சேர்ந்த  காணொளி வடிவமைப்பாளரும் புகைப்பட கலைஞருமான முஹம்மத் ஸைத்க்கு (Mohamed Zaidh) சவூதி அரேபிய இளவரசர்  ஃபஹத் பின் ஜலாவி அவர்களிடமிருந்து (President of the ICRE)  பாராட்டு சான்றிதழும் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.

கடந்த ஜுலை மாதம் 01 ஆம் திகதி சவூதி அரேபியாவின் தாயிப் நகரில் உலகின் மிகப்பெரிய ஒட்டக திருவிழாவான ‘பட்டத்து இளவரசர் ஒட்டகத் திருவிழா’ (Crown Prince Camel Festival) ஆரம்பமானது.

இம்முறையும் போட்டிக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஒட்டகங்கள் வருகைத்தந்து, ஆரம்ப கட்டங்களுடன் 350 போட்டிகள் நடாத்தப்பட்டன.

ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த இப்போட்டி நிகழ்ச்சியில் காணொளி வடிவமைப்பாளராகவும் புகைப்படக் கலைஞராகவும் கடமையாற்றிய இலங்கை கொட்டராமுல்லை பிரதேசத்தை சேர்ந்த முஹம்மத் ஸைத் (Mohamed Zaidh) அவரது சேவையை பாராட்டி சவூதி அரேபிய இளவரசர் ஃபஹத் பின் ஜலாவி அவர்களிடமிருந்து சேவை பாராட்டு சான்றிதழும் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த பட்டத்து இளவரசர் ஒட்டகத் திருவிழாவை காண சவூதி அரேபியாவுக்கான இலங்கை தூதரவர் பக்கீர் அம்சா (Pakeer Amza) அவர்களும் வருகைத் தந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையை தளமாகக் கொண்ட NEWSNOW.LK யின் முன்னாள் தயாரிப்பாளரான Mohamed Zaid அவர்களுக்கு Newsnow குழுமத்தின் வாழ்த்துக்களும் பாராட்டும் உரித்தாகட்டும்!

 

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...