வைத்தியர் ஒருவரை உருவாக்க மக்கள் வரிப்பணத்திலிருந்து 4 மில். ரூபா ஒதுக்கப்படுகிறது’

Date:

இந்நாட்டில் வரி செலுத்தும் மக்களின் பணத்தில் வைத்தியர் ஒருவரை உருவாக்குவதற்கு சுமார் நான்கு மில்லியன் ரூபா ஒதுக்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

” மருத்துவ மாணவர் ஒருவர் பல்கலைக்கழகத்தில் ஐந்தாண்டு கல்வியை நிறைவு செய்வதற்கு மக்களின் பணத்தில் இருந்து 40 இலட்சத்து 92,915 ரூபாய் செலவிடப்படுகிறது.

இது மாதாந்த அடிப்படையில் 68,215 ரூபாவாகும். வரி செலுத்துவோர் பொறியியல் மாணவர் ஒருவருக்கு 2.1 மில்லியன் ரூபாவும், முகாமைத்துவ மாணவருக்கு 1 மில்லியன் ரூபாவும், கலைத்துறை மாணவர் ஒருவருக்கு 1.3 மில்லியன் ரூபாவும் வரி செலுத்தும் மக்களின் பணத்திலிருந்து ஒதுக்கப்படுகிறது. ” என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...