‘இளைஞர்கள் உயர் கல்வி கற்பதானது காலத்தின் தேவையாக மாறியுள்ளது’

Date:

கல்வியலாளர்களும் அரசியலுக்கு பிரவேசித்தால் மாத்திரமே
அரசியலில் மாற்றத்தை கொண்டு வர முடியும் என பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளரும், அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் பணிப்பாளருமான கலாநிதி இல்ஹாம் மரைக்கார் தெரிவித்தார்.

புத்தளம் ஐ.சொப்ட் உயர் கல்வி நிறுவனத்தின் விருது வழங்கும் நிகழ்வுகள் அண்மையில் புத்தளம் மரிக்கார் வீதியில் அமைந்துள்ள கந்தையா கேட்போர் கூடத்தில் ஐ.சொப்ட் நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.கே.எம்.அப்ராஸ் தலைமையில் நடைபெற்ற போது அங்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இளைஞர்கள் உயர் கல்வி கற்பதானது காலத்தின் தேவையாக மாறியுள்ளது. கல்வி எழுச்சி ஊடாகவே சிறந்த சமூகத்தை கட்டியெழுப்ப முடியும்.

கல்வியலாளர்கள் தமது நடவடிக்கைகளை கல்வியின் பால் மாத்திரம் நிறுத்தி விடாமல் அரசியலுக்குள்ளும் பிரவேசித்தால் மாத்திரமே அரசியலில் சிறந்ததொரு மாற்றத்தை கொண்டு வர முடியும் எனவும் தெரிவித்தார்.

-எம்.யூ.எம்.சனூன்

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...