இன்று 20 ரயில் பயணங்கள் ரத்து!

Date:

ரயில்  லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் நேற்று (11) நள்ளிரவு முதல் பல ரயில் நிலையங்களில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.

சம்பள அதிகரிப்பு தொடர்பான பிரச்சினையை அடிப்படையாக கொண்டு இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக அந்த சங்கத்தின் செயலாளர்  எஸ்.ஆர்.சி.எம்.சேனாநாயக்க தெரிவித்தார்.

பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (12) காலை பல ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சிலாபம், கணேவத்தை, அளுத்கமவில் இருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் பல ரயில்கள் இன்று காலை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து துணை பொது மேலாளர் எம்.ஜே. இதிபொலகே தெரிவித்தார்.

மேலும், கொழும்பில் இருந்து இயக்கப்படவிருந்த பல குறுகிய ரயில் பயணங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தற்போது, ரம்புக்கன, பொல்கஹவெல, கண்டி, மஹவ, குருநாகல், காலி, அவிசாவளை ஆகிய பகுதிகளில் இருந்து ரயில்கள் வருவதாக ரயில்வே போக்குவரத்துப் பிரதிப் பொது முகாமையாளர் எம்.ஜே.  இதிபோலகே தெரிவித்தார்.

இந்த பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று காலை இயக்கப்படவிருந்த சுமார் 20 ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...