கப்பல்களில் ஏற்படும் எண்ணெய் கசிவை கண்டறிய உதவும் பிரான்ஸ் – புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!

Date:

இலங்கை கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் பிரான்ஸ் அரசாங்கம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் கப்பல்களில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்படுகிறதா என்பதை கண்டறியும் வகையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

செயற்கைகோள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆய்வு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை கடல்பரப்புக்குள் பிரவேசிக்கும் கப்பல்களில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்படும் சம்பவங்கள் கடந்த காலங்களில் பதிவாகியிருந்தன.

இந்த நிலைமையானது இலங்கையின் கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் சுற்றுச்சுழல் அமைப்பை கடுமையாக பாதித்தது.

இந்த நிலையிலே, நிலைமைகளை கண்காணிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...