‘செனல் 4 விவகாரம்’: கடந்த 4 வருடங்களில் தன் மீது பல குற்றச்சாட்டுகள்!

Date:

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் உண்மையில் என்ன நடந்தது என்பதை செனல் 4 வெளியிட்ட ஆவணப்படம் மூலம் நன்கு புரிந்துக்கொள்ள முடியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

செனல் 4 மூலம் வெளியிடப்பட்ட ஆவணப்படம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

“ பார்க்கப் போனால் அன்று தெரிவித்ததை விட முற்றிலும் வேறான ஒரு விடயமே நடந்துள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் நான்கு வருடங்களாக வழங்கக்கூடிய தொல்லைகள் அனைத்தும் வழங்கப்பட்டன. அதற்கான பல தீர்ப்புகளும் வழங்கப்பட்டன.

செனல் 4 தொடர்பிலான கடிதத் தயாரிப்பை நிறைவு செய்ததன் பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை பிரதிநிதியை நான் சந்திப்பேன்.

ஐக்கிய நாடுகள் சபையின் பரிந்துரையின் படி, ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணையை நானும் கோருகின்றேன்.” என தெரிவித்தார்.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...