கியூபாவுடன் இராஜதந்திர உறவை மீண்டும் வலுப்படுத்தும் இலங்கை!

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஹவானாவில் கியூபா ஜனாதிபதி மிகுவல் டியாஸ் கேனலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

ஹவானாவில் நடைபெறவுள்ள ஜி77 மற்றும் சீன உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கியூபாவுக்கு சென்றுள்ளார்.

கியூபா ஜனாதிபதி மிகுவல் டியாஸ் கேனலின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உச்சிமாநாட்டில் கலந்துகொண்டுள்ளார்.

“தற்போதைய வளர்ச்சி சவால்கள், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளின் பங்கு” என்ற தலைப்பில் இந்த உச்சி மாநாடு இன்றும் நாளையும் ஹவானாவில் நடைபெறவுள்ளது.

உச்சிமாநாட்டுடன், இலங்கைக்கும் கியூபாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்காக ஜனாதிபதி விக்ரமசிங்கவிற்கும் கியூபா ஜனாதிபதிக்கும் இடையில் இருதரப்பு கலந்துரையாடல்கள் இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போது, இலங்கைக்கும் கியூபாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இரு தலைவர்களும் விருப்பம் தெரிவித்தனர்.

ஜனாதிபதி – மிகுவல் டியாஸ் கேனல் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் இரு நாட்டு மக்களையும் இணைக்கும் நட்பின் உறவுகளை எடுத்துரைத்தார்.

பொருளாதார மற்றும் வணிக உறவுகளை விரிவுபடுத்துவது குறித்தும் இருவரும் அவதானம் செலுத்தினர்.

ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக கியூபா மக்களுக்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள தடையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான கோரிக்கைக்கு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் இலங்கை ஆதரவளித்தமைக்கு கியூபா ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...