மணல் அகழ்வுக்கு எதிராக திருமலையில் பாரிய ஆர்ப்பாட்டம்!

Date:

திருகோணமலை, குச்சவெளி பகுதியில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த ஆர்ப்பாட்டம் நேற்று காலை முதல் நடாத்தப்பட்டு வருகிறது.

குச்சவெளி பகுதியில் GSMB மற்றும் MIDWEST நிறுவனத்தின் ஒப்பந்தத்தை உடனடியாக நிறுத்துமாறு கோரி ஆயிர கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் பிரதேச மக்கள் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

மணல் அகழ்வு காரணமாக இயற்கை வளங்கள் பாதிக்கப்படுவதாகவும், தமது எதிர்கால சந்ததிக்கு இயற்கை வளங்கள் இல்லாமல் போவதாகவும் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை உரிய தரப்பினர் முன்னெடுக்க வேண்டும் என குச்சவெளி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...