என்ஜியோகிராம் இயந்திரம் இல்லாததன் காரணமாக மாரடைப்பால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு

Date:

பதுளை பொது வைத்தியசாலையில் கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட 1883 பிரேத பரிசோதனைகளில் 770 பேர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

என்ஜியோகிராம் இயந்திரம் இல்லாததன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதி செயலாளர் வைத்தியர் பாலித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஊவா மாகாணத்திலுள்ள 1.5 மில்லியன் மக்கள் இந்த சேவையினை பெற்றுக்கொள்வதாயின் கண்டி மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலைகளுக்கு செல்ல வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் நாளொன்றுக்கு பதிவாகும் இருதய நோயாளர்களின் எண்ணிக்கை மிக வேகமாக ஆதரித்து வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

இதன்படி, நாளொன்றுக்கு சுமார் 170 இருதய நோயாளர்கள் பதிவு செய்யப்படுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதயநோய் நிபுணர் கோத்தாபய ரணசிங்க தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நோக்கிச் சென்று கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று...