அகில இலங்கை ரீதியாக இடம்பெற்ற தமிழ் கட்டுரை போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்ற புத்தளம் முஹம்மத் ஜனீஸ் செய்னப்!

Date:

(எம்.யூ.எம்.சனூன்)

பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் அகில இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட மாணவர் சாகித்திய விழாவில், ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கிடையே நடாத்தப்பட்ட தமிழ் கட்டுரை போட்டியில் இரண்டாம் இடத்தினை புத்தளத்தைச் சேர்ந்த முஹம்மத் ஜனீஸ் செய்னப் பெற்றுக்கொண்டுள்ளார்.

“எமது தேசத்தை விழிப்படைய செய்வோம்” எனும் தொனிப்பொருளில் பேராதனை பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் கலாச்சார துணை குழுவினரால் 28 வது தடவையாக இந்த போட்டி நடாத்தப்பட்டது.

இதற்கான பரிசளிப்பு விழா அண்மையில் பல்கலைக்கழக பொறியியல் பீட ஈ.ஓ.ஈ. அரங்கில் இடம்பெற்றது.

புத்தளம் நாகவில்லு எருக்கலம்பிட்டி முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் தரம் 04 இல் கல்வி பயிலும் இம்மாணவி நாகவில்லு முஹம்மது ஜனீஸ் மற்றும் பாத்திமா சியாஸ்னா தம்பதிகளின் புதல்வியாவார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...