மத்திய மாகாண பாடசாலை மாணவர்களிடையே கல்வி அறிவு குறைவடைந்துள்ளது!

Date:

மத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்புகளில் கல்வி கற்கும் மாணவர்களில் 3 வீதமானவர்களே சிறந்த கல்வியறிவைக் கொண்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தோற்றுப் பரவிய காலப்பகுதியில் கற்றல் மற்றும் கற்பித்தல் நடவடிக்கையில் ஏற்பட்ட தடைகளே இந்த நிலைமைக்கு காரணம் என மத்திய மாகாண கல்விச் செயலாளர் மேனகா ஹேரத் தெரிவித்துள்ளார்.

மத்திய மாகாணத்தில் தரம் 4 மற்றும் 5 மாணவர்களின் கல்வி அறிவை மேம்படுத்துவதற்கு திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த திட்டத்திற்கு ஓய்வுபெற்ற ஆசிரியர்களின் ஆதரவைப் பெறவுள்ளதாக மாகாண கல்விச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஆரம்பப் பிரிவு மாத்திரமன்றி 6 ஆம் ஆண்டு முதல் 11 ஆம் ஆண்டு வரையான மாணவர்களின் கல்வியறிவை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை அமுலில் உள்ளதாக மத்திய மாகாண கல்விச் செயலாளர் மேனகா ஹேரத் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...

ஓமான் வாழ் இலங்கையர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு: ஓமான் வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் கலந்துரையாடல்!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஓமான் வெளிவிவகார அமைச்சர்...

ஈரானிய வீரர்களை மீட்டது இலங்கையின் சிறந்த வெளியுறவுக் கொள்கையின் அடையாளம்: அலி சப்ரி பாராட்டு

ஈரானிய வீரர்களை மீட்டெடுத்தமை மற்றும் அந்த கப்பலுக்கு இலங்கைக் கடற்பரப்பில் அனுமதி...