முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஒளியேற்றப்படவுள்ள கொழும்பு தாமரை கோபுரம்

Date:

இஸ்லாமிய சந்திர நாட்காட்டியின் மூன்றாவது மாதமான ரபியால்-அவ்வல் மாதத்தில் இன்றைய நாளில் சவூதி அரேபியாவின் மக்கா நகரில் நபிகள் நாயகம் பிறந்ததாக இஸ்லாம் கூறுகிறது.

அனைத்து மனிதகுலத்திற்கும் அன்பு மற்றும் அமைதியின் செய்தியைப் பரப்பிய இஸ்லாத்தின் சிறந்த ஆசிரியரான முஹம்மது நபி, அல்லாஹ்வின் கடைசி தூதர் என்று அறியப்படுகிறார்.

நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை இஸ்லாமியர்கள் சிறப்பான நாளாகக் கருதுகிறார்கள்.

மரியாதைக்குரிய மனித நேயத்தைக் கட்டியெழுப்பத் தன்னை அர்ப்பணித்த நபி அவர்களின் பிறந்தநாளை இன்று உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதேவேளை, நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை முன்னிட்டு கொழும்பு தாமரை கோபுரம் பச்சை மற்றும் வெள்ளை நிறங்களில் இன்று ஒளியேற்றப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...