முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஒளியேற்றப்படவுள்ள கொழும்பு தாமரை கோபுரம்

Date:

இஸ்லாமிய சந்திர நாட்காட்டியின் மூன்றாவது மாதமான ரபியால்-அவ்வல் மாதத்தில் இன்றைய நாளில் சவூதி அரேபியாவின் மக்கா நகரில் நபிகள் நாயகம் பிறந்ததாக இஸ்லாம் கூறுகிறது.

அனைத்து மனிதகுலத்திற்கும் அன்பு மற்றும் அமைதியின் செய்தியைப் பரப்பிய இஸ்லாத்தின் சிறந்த ஆசிரியரான முஹம்மது நபி, அல்லாஹ்வின் கடைசி தூதர் என்று அறியப்படுகிறார்.

நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை இஸ்லாமியர்கள் சிறப்பான நாளாகக் கருதுகிறார்கள்.

மரியாதைக்குரிய மனித நேயத்தைக் கட்டியெழுப்பத் தன்னை அர்ப்பணித்த நபி அவர்களின் பிறந்தநாளை இன்று உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதேவேளை, நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை முன்னிட்டு கொழும்பு தாமரை கோபுரம் பச்சை மற்றும் வெள்ளை நிறங்களில் இன்று ஒளியேற்றப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...