துப்பாக்கி வைத்திருப்போருக்கு பாதுகாப்பு அமைச்சின் முக்கிய அறிவிப்பு!

Date:

துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களை புதுப்பிக்கும் நடவடிக்கை ஒக்டோபர் முதலாம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் 31 ஆம் திகதி நிறைவடையவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த தினத்தின் பின்னர் 2024 ஆம் ஆண்டிற்காக துப்பாக்கிகளுக்கான அனுமதிப் பத்திரங்களை புதுப்பிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட மாட்டாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, 2024 / 2025 வருடங்களுக்கான தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின் பதிவுகளைப் புதுப்பிக்கும் நடவடிக்கையும் எதிர்வரும் முதலாம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த தினத்தின் பின்னர் மேற்கொள்ளப்படும் புதுப்பிப்பு நடவடிக்கைகளுக்கு தாமதக் கட்டணம் அறவிடப்படும் அல்லது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...