கலாநிதி இல்ஹாம் மரைக்காரின் அனுசரனையில் புத்தளம் வை.எம்.எம்.ஏ கிளை உதைப்பந்தாட்ட வீரர்களுக்கு ஜேர்ஸி வழங்கி வைப்பு!

Date:

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் கலாநிதி ஏ.எம்.ஏ அஸீஸ் உதைப்பந்தாட்ட போட்டி இம்முறை திருகோணமலை ஏகாம்பரம் விளையாட்டு அரங்கில் வெகு விமரிசையாக 30 செப்டெம்பர் 2023 மற்றும் 1 ஒக்டோபர் 2023 ஆம் திகதிகளில் நடைப்பெறவுள்ளது.

மேற்படித்தொடரில் புத்தளம் அங்கத்துவ வை.எம்.எம்.ஏ கிளை சார்பான வீரர்களுக்கான ஜேர்ஸிக்களை CBS foundation அமைப்பின் ஸ்தாபகரும் , அமேசன் கல்லூரியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி இல்ஹாம் மரைக்கார் வழங்கி வைத்தார்.

இந் நிகழ்வில் மலேசியாவில் சாதனைப்படைத்த சர்வதேச ரீதியிலான மாஸ்டர்ஸ் மெய்வல்லுனர் போட்டியில் உயரம் பாய்தலில் தங்கப்பதக்கம் வென்ற ஆசிரியர்

M. F. M. Humayoon, 200M ஓட்டப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற ஆசிரியர் M. F. M. Thufail ஆகியோருக்கான கௌரவிப்பு I soft கல்லூரியில் நேற்று முன்தினம் (2023-09-28) நடைப்பெற்றது.

இந் நிகழ்வில் புத்தளம் வை.எம்.எம்.ஏ மாவட்ட பணிப்பாளர் ஆசிரியர் எம்.டீ.எம் நபீல் , மரண விசாரணை அதிகாரியும் , மத்தியஸ்த சபை உப தலைபர்.பீ.எம் ஹிசாம், வை.எம்.எம்.ஏ கிளையின் பொறுப்புதாரியும், புத்தளம் மற்றும் கல்பிட்டி பிரதேச செயலகத்தின் மத்தியஸ்த சபை அதிகாரி முஜாஹித் நிசார் , I soft கல்லூரியின் பணிப்பாளரும் , கல்வியாளருமான அப்ராஸ் ஆசிரியர், புத்தளம் உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளரும், புத்தளம் தள வைத்தியசாலையின் முகாமைத்துவ உதவியாளருமான ஜவ்ஸி ஜதா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...