பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் விபத்து: ஸ்தலத்திலே ஒருவர் பலி

Date:

ஏறாவூர் மிச்நகர் பிரதான வீதி புகையிரத கடவையில் இன்று மட்டக்களப்பில் இருந்து மாகோ நோக்கி பயணித்த புகையிரத்தில் முச்சக்கரவண்டி மோதுண்டு  38 வயதுடைய அப்துல் றகுமான் முகம்மது றமீஸ் என்பவர் ஸ்தலத்திலே உயிரிழந்தார்.

உயிரிழந்த நபர் ஏறாவூர் மீராகேணியை வதிவிடமாக கொண்டவராவர்.

இக்கடவை பாதுகாப்பற்ற கடவையாக பல மாதங்களாக காணப்படும் நிலையில் இத்துயர சம்பவம் இன்று நிகழ்ந்துள்ளது.


இவருடைய மரணம் போன்று மற்றுமொரு உயிர் போய்விடக்கூடாது என்ற அடிப்படையில் பிரதேச மக்களால் “பாதுகாப்பான புகையிரத கடவை வேண்டும்’ உரிய அதிகாரிகள் தீர்வினை பெற்றுத்தர வேண்டும் எனக் கோரி ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

சடலம் தற்போது ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

தகவல்- உமர் அறபாத்- ஏறாவூர்.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...