வெலிகமயில் புனித மீலாத் பெருவிழா: வெளிநாட்டவர் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

Date:

18 ஆவது வருடமாக இடம்பெற்ற புனித மீலாதுந் நபி பெருவிழா தரீக்கத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யாவின் ஆன்மீகத் தலைவர்  இமாம், ஷெய்ஹ், ஜமாலிய்யா அஸ்ஸெய்யித் கலீல் அவ்ன் அல் ஹஸனிய்யுல் ஹுஸைனிய்யுல் ஹாஷிமிய் மௌலானா (வாப்பா நாயகம்) தலைமையில் கடந்த 29  ஆம் திகதி வெள்ளிக்கிழமை வெலிகம பைத்துல் பரக்காஹ் இல்லத்தில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் ஏராளமான நபி நேசர்கள் உட்பட இந்தியா, டுபாய், கட்டார், குவைத், மலேசியா, சிங்கப்பூர், சவூதி, லண்டன் உட்பட பல நாடுகளில் இருந்து நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

தமிழ்நாடு ஜமாஅத்துல் (ஜம்இய்யதுல்) உலமா பொதுச்செயலாளர், டாக்டர் மௌலவி அன்வர் பாதுஷா (உலவி), சென்னை சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்கத்தின் தலைவர் டாக்டர் ஷெகு அப்துல்லாஹ் ஜமாலி, மௌலவி முஸ்தபா (மஸ்லாஹி) ஆகியோர் நிகழ்வில் சிறப்புரையாற்றினர்.

ஹொங்கொங் அஹ்மத் ஸாலிஹ் பாஹீமி மற்றும் மௌலவி பைஸல் காரி ஆகியோரின் நபி புகழ் கஸீதாக்களும் விழாவில் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.

-எம்.எஸ்.எம்.ஸாகிர்

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...