டிசம்பர் மாத பாடசாலை விடுமுறையில் மாற்றம்: விசேட அறிவிப்பு

Date:

உயர்தரப் பரீட்சை ஜனவரியில் நடைபெறுவதால் டிசம்பர் மாத பாடசாலை விடுமுறையில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன்படி பாடசாலை தவணை விடுமுறை டிசம்பர் 22ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் உயர்தரப் பரீட்சை தொடர்பில் கருத்துக்களை முன்வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

உயர்தரப் பரீட்சை தினம் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

அதன்படி ஜனவரி 4 முதல் 31 ஆம் திகதி வரையில் பரீட்சை இடம்பெறவுள்ளது. யாரேனும் விண்ணப்பிக்க இருந்தால் அவர்களுக்கு 3 நாட்கள் வழங்கப்பட்டுள்ளது. பரீட்சை தொடர்பான கால அட்டவணை அடுத்த வாரமளவில் வெளியிடப்படும்.

இதேவேளை பாடசாலை விடுமுறை இம்முறை டிசம்பர் 22ஆம் திகதியளவில் வழங்கப்படலாம். ஆரம்ப பிரிவுகள் ஜனவரி 2ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்.

பரீட்சை முடிவடைந்த பின்னர் மற்றைய பாடசாலைகள் ஆரம்பிக்கப்படலாம். இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் கல்வி அமைச்சினால் வெளியிடப்படும்   .

Popular

More like this
Related

இஸ்லாம் மலேசியா நிறுவனத்தின் நிர்வாகம் மற்றும் ஆளுகை குறித்த பயிற்சித் திட்டம்

மலேசிய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் லத்திஹான் இஸ்லாம் மலேசியா (ILIM) நிறுவனம்,...

கெஹெல்பத்தர பத்மேவின் சொத்துகள் முடக்கம்

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு...

கொழும்பின் பல பகுதிகளில் 10 மணிநேர நீர்வெட்டு.

கொழும்பு 01 முதல் 15 வரை பல பகுதிகளுக்கு நாளைய தினம்...