கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டப்பகுதியில் பஸ்ஸொன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் ஐவர் உயிரிழந்துள்ளதாக கொள்ளுபிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து காரணமாக டுப்ளிகேஷன் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கொழும்பில் இருந்து மத்துகம நோக்கி பயணித்த பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. அப்போது, பஸ் பின்னால் வந்த பவுசர் மற்றும் கார் ஒன்றும் பஸ் மீது மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸாரும் விமானப்படையினரும் இணைந்து பேருந்தில் சிக்கிய இருவரை மீட்பதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் அந்த வீதியூடான போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.