உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்: வர்த்தக அமைச்சர்

Date:

அடுத்த வருடம் உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதனைக் கருத்தில் கொண்டு அரிசி கையிருப்பை பராமரிக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.

இதனிடையே கோழி இறைச்சியின் விலையை குறைக்கும் அரசின் முயற்சி தோல்வியடைந்து வருகிறது. கோழிப்பண்ணை உற்பத்தி நிறுவனங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உரிய முடிவுகள் கிடைக்காததே அதற்குக் காரணம்.

பாரியளவிலான கோழி உற்பத்தி நிறுவனங்களுடனான பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

சந்தையில் பொருட்களின் விலைகள் போதியளவு குறைவடையவில்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...