இலங்கை வந்துள்ள வெளிவிவகார அமைச்சரை சந்திக்க தமிழ் எம்.பிக்கள் முயற்சி

Date:

இலங்கைக்கு  உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை சந்திக்க தமிழ் கட்சிகள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் வடக்கின் ஏனைய கட்சிகளும் தெற்கின் சில தமிழ் கட்சிகளும் எஸ்.ஜெய்சங்கரை சந்திக்க நேரத்தை கோரியுள்ளன.

என்றாலும், இம்முறை ‘IORA’ மாநாட்டில் கலந்துகொள்ளவே இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்துள்ளதுடன், அவரது நேர அட்டவணையும் இறுக்கமாக உள்ளது.

இன்றையை தினம் ‘IORA’ மாநாட்டில் கலந்துகொள்ளும் எஸ்.ஜெய்சங்கர் பிற்பகல் மற்றும் மாலை வேளையில் ஜனாதிபதி, பிரதமர் உட்பட அரசாங்கத்தின் உயர்மட்ட தலைவர்களுடன் கலந்துரையாடல்களை நடத்த உள்ளார்.

நாளைய தினம் திருகோணமலையில் பல்வேறு நிகழ்வுகளில் எஸ்.ஜெய்சங்கர் கலந்துகொள்ள உள்ளதுடன், மாலை இந்தியா திரும்பவும் உள்ளார்.

 

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...