ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தெரிவுக்குழுவை நியமிக்குமாறு பிரேரணை முன்வைப்பு

Date:

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிரித்தானியாவின் ‘செனல் 4’ வெளியிட்ட ஆவணப்படம் மூலம் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்காக பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவை நியமிப்பதற்கான பிரேரணை இன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரதீப் உந்துகொடவினால் இந்த பிரேரணை சபையில் முன்வைக்கப்பட்டது.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மற்றும் பல்வேறு குழுக்களின் விசாரணைகளின் பின்னரும் இந்த சம்பவம் தொடர்பில் பல்வேறு தரப்பினால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருவதாக 20 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட பிரேரணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்படி, பாராளுமன்ற நிலையியற் கட்டளை 101 இன் விதிமுறைகளுக்கு அமைய 11 பேர் கொண்ட குழுவொன்றை நியமிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் சபாநாயகரினால் நியமிக்கப்பட வேண்டுமெனவும் முன்மொழியப்பட்டுள்ளது.

எந்தவொரு நபரையும் குழுவின் முன் முன்னிலையாகுமாறு அழைப்பதற்கும், எந்தவொரு நபர் மற்றும் ஆவணம் அல்லது பதிவேட்டினை பெறுவதற்கும் அத்தகைய ஆதாரங்களை எழுத்துப்பூர்வமாக அல்லது வாய்மூலமாக பெறுவதற்கும் குறித்த குழுவிற்கு அனுமதி வழங்கும் வகையில் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை முழுமையாக பரிசீலிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த விசேட குழுவின் முதலாவது கூட்டத்தில் இருந்து இரண்டு மாதங்களுக்குள் அல்லது பாராளுமன்றம் வழங்கக்கூடிய காலப்பகுதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்பபடுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Popular

More like this
Related

ஈரானிய வீரர்களை மீட்டது இலங்கையின் சிறந்த வெளியுறவுக் கொள்கையின் அடையாளம்: அலி சப்ரி பாராட்டு

ஈரானிய வீரர்களை மீட்டெடுத்தமை மற்றும் அந்த கப்பலுக்கு இலங்கைக் கடற்பரப்பில் அனுமதி...

சதாம் உசேன் முதல் அலி கமேனி வரை: அமெரிக்காவின் இரட்டை வேடமும் சர்வதேச நீதியும்.

'அல்லாஹ்வின் பாதையில் இறந்தவர்களை 'மரணித்தவர்கள்' என்று கூறாதீர்கள். ஏனெனில் அவர்கள் உயிருடனேயே...

இந்தியப் பிரதமர் மோடியை சந்தித்தார் அமைச்சர் விஜித ஹேரத்!

‘ரைசினா கலந்துரையாடல் 2026’ (Raisina Dialogue 2026) மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா...

ஈரானியக் கப்பல் விவகாரம்: மனிதாபிமான அடிப்படையில் இலங்கை தன்னிச்சையான முடிவை எடுத்துள்ளது: ஜனாதிபதி

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள 'IRIS Bushehr' என்ற ஈரானியக் கப்பலில்...