பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை நிர்ணயம் செய்வதற்கும், அவர்களின் சிறப்புரிமைகளை நிர்ணயம் செய்வதற்கும், ஒழுக்க மீறல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு தனியான அதிகார சபையொன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான அமைச்சரவை பத்திரமொன்று இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த அதிகார சபை ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழுவைக் கொண்டதாக அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பிலான பிரேரணையும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.