தேசிய அடையாள அட்டை கட்டணத்தில் திருத்தம்!

Date:

தேசிய அடையாள அட்டையினை வழங்குவதற்காக அறவிடப்படும் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, தேசிய அடையாள அட்டையின் சான்றளிக்கப்பட்ட பிரதிக்கான கட்டணம் 2,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேசிய அடையாள அட்டையின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்துவதற்கான கட்டணம் நிகழ்நிலை முறைமை ஊடாக சமர்ப்பிக்கும் போது 25 ரூபாவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த ஆவணங்களை பௌதீக ஆவணங்கள் மூலமாகவோ அல்லது ஆணையாளர் நாயகம் ஏற்றுக்கொள்ளக்கூடிய மின்னணு முறை மூலமாகவோ சமர்ப்பிக்கப்படும்போது 500 ரூபா அரவிடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தேசிய அடையாள அட்டைக்கான புகைப்படக் கலைஞராக பதிவு செய்வதற்கு, முன்னதாக 1000 ரூபாவாக இருந்த கட்டணம் தற்போது 15,000 ரூபாவாக இருக்க வேண்டுமென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், பதிவுச் சான்றிதழைப் புதுப்பிப்பதற்கான ஆண்டுக் கட்டணம் 2,000 ரூபாயில் இருந்து 3,000 ரூபாவாக அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

மீண்டும் வழமைக்குத் திரும்பும் ரயில் சேவைகள்!

திட்வா புயல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு...

இஸ்லாமிய இலக்கியம்: அரபு எண்களின் தோற்றமும் பரவலும்!

-பொறியாளர் எஸ்.எம்.எம். ரிஃபாய் மனித வாழ்க்கையின் ஒவ்வொரு நாளிலும் எண்கள் தவிர்க்க முடியாதவை....

போதைப்பொருள் பாவனையாளர்களைக் கண்டறிய இன்று முதல் புதிய முறை!

போதைப்பொருள் பயன்படுத்தும் சாரதிகளைக் கண்டறியும் உமிழ்நீர் பரிசோதனை இன்று (17) முதல்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை.

இன்றையதினம் (17) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக வரண்ட வானிலை நிலவும்...