புறக்கோட்டை தீ விபத்து தொடர்பில் விரிவான விசாரணை ஆரம்பம்!

Date:

கொழும்பு – புறக்கோட்டை – 2ம் குறுக்கு தெரு பகுதியிலுள்ள ஆடையகமொன்றில் பரவிய தீ தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் முதல் தொடர்ச்சியாக வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்படி, தீ பரவிய வர்த்தக நிலையம் மற்றும் அதனை அண்மித்துள்ள வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த தீ விபத்தில் 21 பேர் காயமடைந்துள்ளதுடன், அவர்களில் 6 பேரின் நிலைமை தொடர்ந்தும் கவலைக்கிடமாக உள்ளதென வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்களில் 11 பெண்களும் அடங்குவதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் குறிப்பிடுகின்றன.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...