புறக்கோட்டை தீ விபத்து தொடர்பில் விரிவான விசாரணை ஆரம்பம்!

Date:

கொழும்பு – புறக்கோட்டை – 2ம் குறுக்கு தெரு பகுதியிலுள்ள ஆடையகமொன்றில் பரவிய தீ தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் முதல் தொடர்ச்சியாக வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்படி, தீ பரவிய வர்த்தக நிலையம் மற்றும் அதனை அண்மித்துள்ள வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த தீ விபத்தில் 21 பேர் காயமடைந்துள்ளதுடன், அவர்களில் 6 பேரின் நிலைமை தொடர்ந்தும் கவலைக்கிடமாக உள்ளதென வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்களில் 11 பெண்களும் அடங்குவதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் குறிப்பிடுகின்றன.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...