சரத் பொன்சேகாவை கட்சியில் இருந்து நீக்க தீர்மானம்?

Date:

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்க ஐக்கிய மக்கள் சக்தி கட்சி தீர்மானித்துள்ளதாக வெளியான தகவல் தொடர்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கருத்து தெரிவித்துள்ளார்.

“நாங்கள் இறுதி முடிவை எடுக்கவில்லை, ஆனால் அவர் நிச்சயமாக கட்சி நலன்களுக்கு எதிராக செயற்படுகிறார்.

இது மோசமானது. சில ஐக்கிய மக்கள் சக்தி எம்பிக்கள் பொன்சேகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர், ஆனால் அது எந்த முடிவையும் தரவில்லை. அவர் யாருடைய பேச்சையும் கேட்பதாக தெரியவில்லை.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் வேட்புமனுவை ஆதரிக்க விரும்பவில்லை என அண்மையில் தம்மைச் சந்தித்த ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரிடம் பொன்சேகா கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இறுதித் தீர்மானத்தை எடுக்கவில்லை என பீல்ட் மார்ஷல் பொன்சேகாவின் செயலாளர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியை அழிக்க ஆர்வமுள்ள தரப்பினரால் சில கதைகள் விதைக்கப்படுகின்றன,” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...