இலங்கை கிரிக்கெட் தலைமை அலுவலகத்துக்கான நுழைவு வீதி தற்காலிகமாக மூடப்பட்டது

Date:

வித்யா மாவத்தையில் இருந்து இலங்கை கிரிக்கெட் தலைமையகத்திற்கான நுழைவுப் பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்துக்கு முன்பாக நடாத்த திட்டமிட்டுள்ள போராட்டத்தை தவிர்க்கும் நோக்கிலேயே இவ்வாறு பாதை மூடல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸார், இராணுவத்தினர், கலகத் தடுப்பு பிரிவு உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவினர் உள்ளிட்டோர் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனடிப்படையில், பத்தரமுல்லே சீலரத்ன தேரர், கடிதமொன்றை கையளிப்பதற்காக ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிற்கு வருகைத் தந்துள்ளார்.

தேரரை முதலில் பொலிஸார் இடைமறித்துள்ளதுடன், பின்னர் கடிதத்தை கையளிப்பதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.

இதேவேளை, ஊழல், மோசடியுடன் தொடர்புடையதாக கூறப்படும் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவர் உள்ளிட்ட நிர்வாகத்தை பதவி நீக்கம் செய்யும் நோக்கத்துடன், பாராளுமன்றத்தில் இன்று விசேட விவாதமொன்று நடாத்தப்பட்டு, மாலை வாக்கெடுப்பு நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த விவாதம் பாராளுமன்றத்தில் தற்போது இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நோக்கிச் சென்று கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று...

நாட்டின் பல பகுதிகளில் 75 மி.மீ. இற்கும் அதிக பலத்த மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல்  மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை ,...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....