‘ஸாஹிம்’ தளத்தினூடாக காஸா மக்களுக்கான உதவி தொடர்கிறது!

Date:

சவூதி மன்னர் ஸல்மான் பின் அப்துல் அஸீஸ், மற்றும் பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் சல்மான் ஆகிய இருவரின் பணிப்பின் பேரில், மன்னர் ஸல்மான் மனிதாபிமான உதவிகள் மற்றும் நிவாரண மையத்தின் “ஸாஹிம்” தளத்தினூடாக காஸாவிலுள்ள  பலஸ்தீன மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நன்கொடைகள் சேகரிக்கும் படலம் கடந்த  2ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறித்த திட்டத்திற்கு சவூதி  மன்னர், 30 மில்லியன் ரியால்களும் பட்டத்து இளவரசர், 20 மில்லியன் ரியால்களும் வழங்கி  ஆரம்பித்து வைத்தனர்.

இந்த திட்டத்தில் கடந்த 8ஆம் திகதி வரை 597,633 பேர் பங்கேற்று, (420,469,922) ரியால்களை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

நிவாரணத்துக்கான மன்னர் ஸல்மான் மையத்திலிருந்து ஒரு சிறப்புக் குழு,  எகிப்தின் தலைநகரான கெய்ரோவுக்குச் சென்று, எகிப்திலுள்ள சவூதி  அரேபியத் தூதுவர் உஸாமா அஹ்மத் நக்லியை சந்தித்தது.

இதன்போது  மனிதாபிமானத் தேவைகளை முன்னுரிமைப்படுத்தி, காஸாவில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான கூடாரங்கள், உணவுக் கூடைகள் மற்றும் மருத்துவப் பொருட்களை, ரபஃஹ் எல்லைக் கடவையூடாக விரைவாகக் கொண்டு செல்வதற்கான வழிமுறைகள் மற்றும் செயல்முறைகள் பற்றியும் விவாதித்தனர்.

(கலாநிதி M.H.M அஸ்ஹர்)

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...