பாராளுமன்றத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும்

Date:

இன்று சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் அரச மற்றும் மாகாண அரசாங்க ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 20,000 ரூபா கொடுப்பனவை எதிர்பார்ப்பதாக அரச மற்றும் தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

20,000 ரூபாவை வழங்குமாறு கோரி பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு முன்பாக போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தொழிற்சங்க சங்கத்தின் இணைப்பாளர் சந்தன சூரியஆராச்சி தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக பாராளுமன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று சமர்ப்பிக்கப்படும் வரவு செலவுத் திட்டத்தில் 20,000 ரூபா கொடுப்பனவு உள்ளடக்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் அனைவருக்கும் கொடுப்பனவு கிடைக்கும் வரை பாரிய தொழில் நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்க சங்கத்தின் இணைப்பாளர் சந்தன சூரியஆராச்சி மேலும் தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...