இலங்கைக்கான புதிய தூதுவர்களுடன் பிரதமர் சந்திப்பு!

Date:

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 10 நாடுகளுக்கான இலங்கைத் தூதுவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (13) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

உலகின் ஏனைய நாடுகளுடன் இணைந்து செயற்படுவதற்கு இலங்கையிடம் உள்ள வாய்ப்புகளை வெளிப்படுத்துமாறும் முதலீடுகள் மற்றும் கூட்டு முயற்சிகளை ஈர்ப்பதற்கு புதிய முயற்சிகளை மேற்கொள்ளுமாறும் இதன்போது பிரதமர் குறிப்பிட்டார்.

வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிப்பதில் எங்கள் கவனம் உள்ளது. அரசாங்கங்கள், முன்னணி வர்த்தக நிறுவனங்கள், முன்னணி முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகம் மற்றும் கைத்தொழில் துறைகளுடன் நீங்கள் தொடர்ந்து தொடர்புகளை ஏற்படுத்த வேண்டும்.

இலங்கையை சுற்றுலாத் தலமாக மட்டுமன்றி பிரதானமாக முதலீடு மற்றும் வர்த்தகத்திற்கான ஒரு கவர்ச்சிகரமான இடமாக ஊக்குவிக்க வேண்டும். ஏனைய நாடுகளுடன் நெருக்கமாக செயற்படுவதன் மூலம் இலங்கை தனது பொருளாதாரத்தை வேகமாக அபிவிருத்தி செய்ய முடியும்.

இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் வகையில் புதிய வலையமைப்பை உருவாக்குவதற்கு அந்நாடுகளிலுள்ள இலங்கையர்களின் அமைப்புகள் மற்றும் அந்த நாடுகளில் உள்ள இலங்கையின் முக்கிய நண்பர்களுடனும் இணைந்து செயற்படுமாறு புதிய தூதுவர்களுக்கு பிரதமர் ஆலோசனை வழங்கினார்.

அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன (பாகிஸ்தான்), எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன (நேபாளம்), க்ஷேனுகா செனவிரத்ன (இந்தியா), அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன (கியூபா), சத்யஜித் ரொட்ரிகோ (இத்தாலி), மதுரிகா வென்னிங்கர் (எகிப்து), தர்மபால வீரக்கொடி (பங்களாதேஷ்), செனரத் திஸாநாயக்க (சிங்கப்பூர்) மற்றும் சந்தன வீரசேன (பெல்ஜியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம்) ஆகிய புதிதாக நியமிக்கப்பட்ட தூதுவர்கள் பிரதமரை சந்தித்தனர்.

 

Popular

More like this
Related

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்கு பின் இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா. தகவல்.

காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன...

கொழும்பு, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களில் விசேட சுகாதாரத் திட்டம்

‘Resolve to Save Lives’ எனும் சர்வதேச நிறுவனத்தின் 242,125 அமெரிக்க...

கதை சார்ந்த விருந்தோம்பலின் புதிய அத்தியாயத்தை இலங்கையில் ஆரம்பிக்கும் TONIK

Acorn குழுமத்தின் வலிமையும், உலகளாவிய அணுகுமுறையும் ஆதரவாக இருப்பதால், TONIK புதுமையான...