2024 வரவு செலவுத் திட்ட இலக்குகளை அடைவதில் அபாய நிலைமை!

Date:

2024 ஆம் ஆண்டிற்கான வரவு- செலவுத் திட்ட இலக்குகளை அடைவதில் அபாய நிலைமை காணப்படுவதாக Fitch Ratings நிறுவனம் தெரிவித்துள்ளது.

வரவு- செலவுத் திட்டம் குறித்த தமது நிலைப்பாட்டை விளக்கும் வகையில் Fitch Ratings வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய தரவுகளுக்கு அமைய, மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.1 வீதமாக இருக்கும் என கணிப்பிடப்பட்டுள்ளதாகவும், வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை அதனைவிட அதிகமாக இருக்கலாம் எனவும் Fitch Ratings நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

2024 ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் வருமான இலக்குகளை எட்டுவது சவாலானது எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

வருமான இலக்குகளை அடைய பெறுமதிசேர் வரியை 18 சதவீதமாக அதிகரித்ததன் மூலம் பொருட்களின் விலை 8.7 வீதம் அதிகரிக்கலாம் எனவும் Fitch Ratings நிறுவனம் கணித்துள்ளது.

அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு நிவாரணம் வழங்குவதற்காக செலவுகளை 14 வீதத்தால் அதிகரிக்கும் நோக்கில் சம்பளம், கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மூலதனச் செலவுகள் குறைக்கப்படலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எதிர்பார்க்கப்படும் 3.3% பொருளாதார வளர்ச்சி வேகம் நிச்சயமற்றது எனவும் Fitch Ratings நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...