தரம் 5 புலமைப்பரிசில் விடைத்தாள் மீள்பரிசீலனை விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

Date:

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான விடைத்தாள் மீள்பரிசீலனை விண்ணப்பங்களை எதிர்வரும் 27ஆம் திகதி முதல் டிசம்பர் 4ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

நிகழ்நிலை முறையில், குறித்த விண்ணப்பங்களை அதிபர் ஊடாக அனுப்பி வைக்குமாறும் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் மற்றும் வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன

2023 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

www.doenets.lk எனும் இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதன் மூலம் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டு சிறிது நேரத்தில் அனைத்து மாவட்டங்களுக்குமான தமிழ் மற்றும் சிங்களம் மொழிகளுக்கான வெட்டுப்புள்ளிகளும் வெளியிடப்பட்டன.

இதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, குருநாகல், கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கான தமிழ் மொழி மூலமான குறைந்தபட்ச வெட்டுப்புள்ளி 147 ஆக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த மாவட்டங்களுக்கான சிங்கள மொழிமூல அதிகூடிய வெட்டுப் புள்ளியாக 154 பதிவுசெய்யப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...