முஸ்லிம்களின் பாரம்பரிய கலைகளின் முக்கிய இடம் வகிக்கின்ற அரபு எழுத்தணிக்கலை சமூகத்தில் இருந்து மறைந்து போயிருந்த சூழ்நிலையில் இக்கலையை மீண்டும் புத்துயிர் ஊட்டி அதன் மூலம் முஸ்லிம்களின் பாரம்பரியத்தையும் கலை உணர்வையும் புத்துயிரூட்டும் ஒரு சிறப்பான பணியில் இலங்கை அரபு எழுத்தணிக் கலை சங்கம் ஈடுபட்டு வருகின்றது.
அதற்கமைய, இலங்கை அரபு எழுத்தணி சங்கம், 20 அரபு எழுத்தணி கலை ஆர்வலர்களுக்கு 2 நாள் வதிவிடப் பயிற்சிநெறியை கடந்த 18-19 ஆம் திகதிகளில் இரத்மலானை பள்ளிவாசலில் மற்றும் NEST அகடமியில் நடாத்தியது.
இந்த பயிற்சி நெறியை அங்கீகரிக்கப்பட்ட அரபு எழுத்தணி கலைஞரான உஸ்தாஸ் ஜே.எம்.உவைஸ் நடத்தினார்.
அரபு எழுத்துக்களை இலங்கையில் மேம்படுத்தும் நோக்கத்துடன் ‘அரபு எழுத்தணி சங்கம்’ 2017 இல் கலை ஆர்வலர்களால் ஸ்தாபிக்கப்பட்டது.
சர்வதேச ரீதியில் போற்றப்படும் அரபு எழுத்துக்களை இலங்கையில் மேம்படுத்துவதே இந்த பயிற்சி நெறியின் முக்கிய நோக்கமாகக் கருதப்படுகிறது.
அதற்கமைய முதன் முதலாக 2018ஆம் ஆண்டு டிசம்பரிலும் இரண்டாவது பயிற்சி நெறி 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலும் சீனாவைச் சேர்ந்த ஹாஜி நூர்தீன் உஸ்தாஸ் பந்தர் மற்றும் சவூதி அரேபியாவைச் சேர்ந்த இரண்டு கல்வியாளர்கள் இலங்கைக்கு வருகைத் தந்து நடத்தினார்கள்.
இதேவேளை இலங்கை அரபு எழுத்தணி சங்கம் டிசம்பர் 2024 இல் ஒரு கண்காட்சியொன்றையும் ஏற்பாடு செய்யவுள்ளது.