‘2023’ வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகளில் 86 வீதமானவை நிறைவேற்றப்பட்டுள்ளன!

Date:

2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகளில் 86 வீதமானவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அவற்றில் சில முன்மொழிவுகள் நடுத்தர மற்றும் நீண்ட கால அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியவை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27(2)ன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

“2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகளின் எண்ணிக்கை 120 ஆகும். அதில் 29 வருவாய் முன்மொழிவுகள், 30 செலவின முன்மொழிவுகள் மற்றும் 61 கொள்கை முன்மொழிவுகளாகும். இவற்றில் 24 வருவாய் முன்மொழிவுகளும், 17 கொள்கை முன்மொழிவுகளும் இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது, ​​தொடங்கப்பட்டு செயல்படுத்தப்படும் முன்மொழிவுகளின் எண்ணிக்கை 62 ஆகும். இதில் 5 வருவாய் முன்மொழிவுகள், 27 செலவின முன்மொழிவுகள் மற்றும் 30 கொள்கை முன்மொழிவுகள் உள்ளடங்குகின்றன.

இதன்படி, மொத்த வரவு – செலவு திட்ட முன்மொழிவுகளில் 86 வீதமானவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது அல்லது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, 17 வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகள் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதற்கான காரணங்கள் தொடர்பில் உரிய அமைச்சுகளில் ஆராயப்படும்.

தொழில்நுட்ப குறைபாடுகள், மனித வள குறைபாடுகளாலும் அல்லது சட்ட சிக்கல்கள் காரணமாகவும் சில முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது.“ என்றும் அவர் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...