அரச நிறுவனங்களுக்கு முன்பாக இன்று கவனயீர்ப்புப் போராட்டம் !

Date:

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று அனைத்து அரச நிறுவனங்களுக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்கங்களின் ஒன்றியம் உட்பட பல தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் இந்தப் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

20,000 ரூபாய் சம்பள உயர்வு, ஜனவரி முதல் உயர்த்தப்பட்ட கொடுப்பனவு 2016 முதல் இழந்த ஓய்வூதிய உரிமையை மீட்டெடுப்பது ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் இடம்பெறுகின்றது.

அதன்படி, இன்று நண்பகல் 12 மணிக்கு அரச நிறுவனங்களுக்கு முன்பாக எதிர்ப்பு போராட்டம் இடம்பெறும் என்றும் பத்தரமுல்லை செத்சிரிபாயவுக்கு முன்பாகவும் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், நாடு நெருக்கடியில் இருந்து மீண்டு வரும் வேளையில் அரசியல் நோக்கத்திற்காக போராட்டங்களை ஏற்பாடு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஜனாதிபதியின் தொழிற்சங்கங்களுக்கான பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...